திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு.
திண்டுக்கல் சீலப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன், இவர் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை மதியம் 2: 30 மணி அளவில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது சவுக்கு சங்கர் என்பவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு ஏ. டி. ஜி. பி யாக தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த அருண் என்பவரை எதற்காக இன்னும் நியமனம் செய்துள்ளீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ஜாதிய வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அவர் கருத்தை பதிவிட்டுள்ளதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.