தொழிற்பழகுநர் பயிற்சியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு

71பார்த்தது
தொழிற்பழகுநர் பயிற்சியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசு தானியங்கி பணிமனையில் காலியாக இருக்கும் கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர் பயிற்சியிடங்கள் நான்கினை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வு, அரசு தானியங்கிப் பணிமனையில் 14. 6. 2024 காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு மற்றும் ஐ. டி. ஐ. யில் கம்மியர் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி