பேருந்து பயணிகளிடம் வாக்கு சேகரிப்பு

570பார்த்தது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இந்து எழுச்சி பேரவை சார்பில் வேட்பாளர் சதீஷ் கண்ணா பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பேரியக்கங்களின் கூட்டமைப்பு இந்து எழுச்சி பேரவை சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சதீஷ் கண்ணா என்பவர் பரிசு பெட்டி சின்னத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் வெள்ளிக்கிழமை மதியம் 4 மணி அளவில் வாக்குகள் சேகரித்தார். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 100% வேலை வாய்ப்பு உறுதி செய்ய வழிவகை செய்யப்படும் எனவும், குடிசைகள் அற்ற பகுதியாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியை மாற்றி அமைக்கப்படும் எனவும்,

தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் அரசின் அனைத்து சலுகைகளும் விரைந்து கிடைக்கும் வண்ணம் புதிய வாரியம் உருவாக்கப்படும் எனவும், அரசு பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்க வழிவகை செய்யப்படும் எனவும், போன்ற பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து தனக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும், என பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் வாக்குகள் சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி