நத்தத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இருசக்கர பேரணி

575பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வருவாய்த்துறை சார்பில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடந்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு தடைபெற்றது. இந்த பேரணியை திட்ட இயக்குநர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி நத்தம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து தொடங்கி நத்தத்தில் உள்ள முக்கிய வீதியில் வழியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் 100% வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை இருசக்கர வாகனங்களை வைத்துக்கொண்டு பேரணியாக சென்றுள்ளனர். தாசில்தார் சுகந்தி, மண்டல துணை தாசில்தார் சுந்தர், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் டேனியல் பிரேம்குமார், வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் உள்ளிட்ட வருவாய், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி