தற்கொலை படை தாக்குதலில் சீன நாட்டினர் 5 பேர் உயிரிழப்பு

52பார்த்தது
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஷங்லா மாவட்டத்தின் மலகாண்டின் என்ற இடத்தில் தற்கொலை படை தாக்குதலில் ஐந்து சீன நாட்டைச் சேர்ந்த நபர்கள் மற்றும் உள்ளூர் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பொறியாளர்களான சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் பயணித்த வாகனத்தின் மீது மற்றொரு வாகனத்தில் வெடிமருந்துகளுடன் வந்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி