சிறுமலையில் ஒரு பலா பழம் 800 ரூபாய் வரை விற்பனை

77பார்த்தது
கனிகளில் முதன்மையான கனிகளாக மா, பலா, வாழையை முக்கனிகளாக குறிப்பிடுவர். இந்த முக்கனிகளையும் அதிகளவில் விளைவிக்க கூடிய ஒரு மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது சிறுமலை. இங்கு ஏராளமான மூலிகைகள் உள்ளதால் இந்த மலையை சஞ்சீவி மலையின் ஒரு சிறு பகுதி என இம்மலையில் வாழும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த சிறுமலையில் பலாப்பழம், மலை வாழைப்பழம், மிளகு, எலுமிச்சை, காபி, சௌ சௌ, அவரை, உள்ளிட்ட மாலை பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் மூலிகை தன்மையுடன் இருப்பதால் மக்கள் சிறுமலை பகுதியில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை அதிகம் வாங்கிச் செல்வர். இங்கு விளைவிக்கப்படும் பலாப்பழம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சிறுமலையில் விளையும் பலாப்பழம் மிகவும் சுவையாகவும், எடை அதிகம் கொண்ட பலா சுளைகளை கொண்டதாகவும் இருக்கும். எனவே மக்கள் சிறுமலை பலா பழங்களை மிகவும் விருப்பமுடன் வாங்கிச் செல்வர். பலாப்பழத்தின் விலை அதன் சுளைகளை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே சுளைகளின் தரம் மற்றும் பழத்தின் எடைக்கு ஏற்ப மலை பகுதிகளில் நேற்று(செப்.2) ரூபாய் 100 முதல் 800 ரூபாய் வரையிலும், தரை பகுதியில் 250 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பழம் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி