மேலமேட்டுப்பட்டியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

4905பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மேலமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து (73), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் மின்சாரம் வராததையடுத்து செல்லப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி வயரை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்தில் காளிமுத்து பலியானார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி