பூங்காவில் நாத்து நடும் பணி துவக்கம்

538பார்த்தது
கொடைக்கானல் ப்ரையண்ட் பூங்காவில் நாத்து நடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த வண்ணம் உள்ளனர்.

அதில் கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் நட்சத்திர ஏரிக்கு அருகில் ப்ரையண்ட் பூங்கா உள்ளது. இதில் வருடம் தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விடுமுறை நாட்களை முன்னிட்டு லட்ச கணக்கில் சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு லட்சத்திற்கு மேல் மலர்கள் கடந்த 4 மாதங்களாக பதியம் செய்யப்பட்டு வருகிறது.

பதியம் செய்யப்பட்ட பூக்களின் மலர்கள் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு மேல் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக இருக்கும் என வியாழக்கிழமை காலை 11 மணியளவில் கொடைக்கானல் தோட்டக்கலை இயக்குனர் காயத்ரி சிறப்பு பேட்டி அளித்தார்.

டேக்ஸ் :