திண்டுக்கல் மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில், 65, 000 மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் வாயிலாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்த விருதுகள், ஆறு பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது. அதன்படி,
1. மாநில அளவிலான சிறந்த வேளாண் தொழில் முனைவோர் விருது. 2. மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில் முனைவோர் விருது.
3. சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த தொழில்முனைவோர் விருது. 4. மாநில அளவில் சிறந்த தரம் மற்றும ஏற்றுமதிக்கான விருது. 5. மாநில அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது.
6. மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோர் விருது.
விருது பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள், awards. fametn. com என்ற இணையதளத்தில் 20. 05. 2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு, “பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எஸ். ஆர் மில்ஸ் சாலை, சிட்கோ தொழில் பேட்டை, திண்டுக்கல்–624003“ என்ற முகவரியில் நேரடியாகவோ, dicdindigul@gmail. com என்ற இ-மெயில், 8925533943 என்ற கைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.