திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி மேற்குதெருவில் வசித்து வரும் பிரகாஷ் என்பவரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 10 நகை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.