பழங்கால கிணறுகளை பராமரிப்பது அவசியம்

69பார்த்தது
பழங்கால கிணறுகளை பராமரிப்பது அவசியம்
திண்டுக்கல்லில் காமராஜர் நீர்தேக்கம் வருவதற்கு முன் சிறுமலை ஒடுக்கம் தண்ணீர் குடிநீர் பற்றாக்குறையை போக்கியது. ஆங்காங்கே கிணறுகள் குளிக்க கொள்ள பயன்பட்டது. கிணறுகளின் தேவை அறிந்து செல்வந்தர்கள் பலர் வெட்டியது தெரிந்தது.

அங்குநகர் பின்புறம் முடக்கு ராஜக்காபட்டி ஊர் கடைசியில் தற்போது அறிவு திருக்கோயில் பாதை முடக்கு ராஜக்காபட்டி செல்லும் வழியில் இக்கிணறு உள்ளது.

மக்கள் பயன்பாடு போக ஆடுமாடுகளுக்கு தாகம் தீர்க்கிறது. மேலும் அவ்வூர் திருவிழா உற்சவங்களுக்கு இக்கிணற்று நீர் கரகம் ஜோடிக்கவும் தீர்த்த மாடவும் பயன்படுகிறது.

கிணற்றின் கல்வெட்டு திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அன்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது.