ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

62பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது 4, 000 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்து இங்குள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி ஃபால்ஸ், தொங்கும் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் குடும்பத்தினருடன் பரிசல் சவாரி செய்து அருவிகளின் அழகை கண்டு ரசித்தனர். மேலும் ஆயுள் மசாஜ் செய்து கொண்டே மெயின் அருவியில் குளித்தனர் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பயணிகள் திறந்ததால் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கலை கட்டியது.

தொடர்புடைய செய்தி