மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் 17 செல்போன்கள் திருட்டு

52பார்த்தது
மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் 17 செல்போன்கள் திருட்டு
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் ஏராளமான மருத்துவ மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். கடந்த சில வாரங்களாக இந்த விடுதியில் மாணவர்களின் செல்போன்கள் அடிக்கடி திருடு போனது. மொத்தம் 17 செல்போன்கள் மாயமாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் இன்று(அக்.04 )புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருட்டுகளில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்.? என்பது குறித்து விடுதியில் - உள்ள கண்காணிப்பு கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.