தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் எழுந்தருளி உள்ள அருள்மிகு தட்சிண காசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் வெண்பூசணியில் நெய் தீபமிட்டு கோவிலை 18 முறை வலம் வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.