தண்ணீர் தொட்டியில் மயங்கி விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு

1939பார்த்தது
தண்ணீர் தொட்டியில் மயங்கி விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு
தர்மபுரி அருகே, துட்டம்பட்டி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். பெயிண்ட ரான இவர், நேற்று, அதே பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் சண்முகத்தை பரிசோதித்து பார்த்து சண்முகம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி