தனுஷ் விவாகரத்து வழக்கு... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோர்டில் ஆஜர்

62பார்த்தது
நடிகர் தனுஷிடம் இருந்து விவாகரத்து கோரும் வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று (நவ.21) குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார். நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கடந்த 2022ஆம் ஆண்டில் அறிவித்தனர். தொடர்ந்து இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. கடந்த 3 முறை இந்த வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகாத நிலையில், இன்று ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். தனுஷ் 12 மணிக்கு வருவார் என கூறப்படுகிறது.

நன்றி: நியூஸ் 18
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி