மகா சிவராத்திரியன்று இரவில் இறைவனுக்கு நடக்கும் அபிஷேக, ஆராதனையில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பூஜைக்கு பின்னர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களைச் சாப்பிட்டுவிட்டு அதன் இலைகளை கோயில் முழுவதும் பறக்கவிட்டு அசுத்தம் செய்வது மிகப்பெரிய பாவமாகும். நாம் கோயிலுக்கு சென்று புண்ணியத்தை பெற வேண்டுமே தவிர பாவத்தை பெறக்கூடாது. இதோடு கோயிலில் தரப்படும் பிரசாதங்களை சிந்தாமல் சாப்பிட வேண்டும்.