தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் ஜனவரியில் ஏலம்

586பார்த்தது
தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் ஜனவரியில் ஏலம்
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மும்பை மற்றும் ரத்னகிரியில் உள்ள சொத்துக்கள் ஏலம் விடப்படவுள்ளன. ஜனவரி 5ஆம் தேதி ஏலம் நடைபெறும். தாவூத்துக்கு சொந்தமான ரத்னகிரியில் உள்ள பங்களாவும் மாம்பழத்தோட்டமும் ஏலத்தில் விடப்படுகிறது. இதற்கு முன்பும் தாவூத்துக்கு சொந்தமான பல சொத்துக்களை மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. தாவூத்துக்கு சொந்தமான உணவகம் 4.53 கோடிக்கு ஏலம் போனது. இதுதவிர ரூ.3.53 கோடி மதிப்பிலான 6 அடுக்குமாடி குடியிருப்பும் ஏலம் விடப்பட்டன. பாகிஸ்தானின் உளவு அமைப்புகளுடன் இணைந்து தாவூத் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாக என்ஐஏ சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி