திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூரிகமானிமிட்டா ஊராட்சியை சேர்ந்த குப்பகவுண்டர் என்பவருக்கு சுப்பிரமணி, நாகராஜ், சேகர், ராஜா என்ற நான்கு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே சுப்பிரமணி (வயது 74) என்பவர் உடல்நல குறைவால் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் தன் அண்ணன் சுப்பிரமணி உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது தம்பி ராஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.