எண்ணெய் கசிவு: நிவாரணம் அறிவிப்பு

66131பார்த்தது
எண்ணெய் கசிவு: நிவாரணம் அறிவிப்பு
சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம், மொத்தம் ரூ.5 கோடியே 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மிக்ஜாம் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும், 787 மீன்பிடி படகுகளை சரிசெய்ய படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி