கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சப் இன்ஸ் பெக்டர் அய்யனார் தலைமையிலான காவல் துறையினர் நேற்று ஜங்ஷன் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கடைவீதி பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.