கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுப்பாக்கம் அருகே அரசங்குடி பிரிவு சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வயல் வேலைக்கு சென்று திரும்பிய 10 க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் வேப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கட்டனர். இது குறித்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.