காட்டுமன்னார்கோவில்: முதலை கடித்து மூதாட்டி காயம்

1533பார்த்தது
காட்டுமன்னார்கோவில்: முதலை கடித்து மூதாட்டி காயம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் மனைவி சின்னம்மா. நேற்று அதே ஊரில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு கரையோரம் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆற்றில் இருந்து வந்த முதலை திடீரென சின்னம்மாவின் இடது காலை கவ்வி கடித்து குதறியது. வலியால் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி