இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு (2024-ஆம் ஆண்டு) பிறந்துள்ள நிலையில், கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் வண்ண கோலங்கள் மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை பரஸ்பரம் தெரிவித்து வருகின்றனர்.