மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு

3317பார்த்தது
மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் நத்தவெளியை சேர்ந்த கண்ணன் மகள் வர்ஷினி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் வண்டிப்பாளையத்தில் உள்ள தாத்தா வீட்டில் கடந்த ஒரு வாரமாக தங்கினார். நேற்று முன்தினம் மொட்டை மாடியில் காய வைத்திருந்த துணியை எடுக்க சென்ற போது தவறி கீழ் தளத்தில் விழுந்தார். படுகாயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி