விசிக தலைவர் அறிக்கை வெளியீடு

82பார்த்தது
விசிக தலைவர் அறிக்கை வெளியீடு
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு நகரச் செயலாளர் பாக்கியராஜ் திமிரி பேரூர் செயலாளர் நாகராஜ் ஆகியோர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியும் செயல்பட்டு வருவதால் , அவர்களிருவரும் மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். அவர்கள் இருவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை ஒழுங்கு நடவடிக்கை குழுவினரிடம் அளிக்கலாம். ஒழுங்கு நடவடிக்கை குழு ஒருமாத காலத்தில் இருதரப்பையும் விசாரித்து கட்சித் தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நடவடிக்கைக்குள்ளான இருவரும் விசாரணை முடியும் வரையில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதியில்லை என சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி