கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 23) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கடும் அவதி அடைந்தனர்.