புவனகிரி: பூச்சி மருந்து குடித்து தற்கொலை

1582பார்த்தது
புவனகிரி: பூச்சி மருந்து குடித்து தற்கொலை
புவனகிரி அருகே பூதாவராயன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த மச்ச வல்லவன் விவசாயக் கூலி தொழிலாளி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் விரக்தியுடைந்த அவர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கினார். அருகில் இருந்த வர்கள் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். புவனகிரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி