சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி

66பார்த்தது
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி
கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் மற்றும் தனியார் கல்வி நிறுவனம் சார்பில் இன்று சூலூரில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் சூலூர் புதிய பேருந்து நிலையம் முதல் சூலூர் காவல் நிலையம் வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி