கோவை: ஐடி பெண் ஊழியருடன் உல்லாசம்... ஏமாற்றிய வாலிபர்

2948பார்த்தது
கோவையில் ஐடி பெண் ஊழியருடன் நெருக்கமான இருந்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கும் சென்னை வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 29 வயது பெண். இவர் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை அம்பத்தூரை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறி அடிக்கடி பேசி வந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் சென்னையில் இருந்து கோவை வந்தார்.

பின்னர் இளம்பெண் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை தவிர வேறு யாரும் இல்லை. இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். அப்போது அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணிடம் தெரிவித்தார். மேலும் அவரை உறவுக்கு அழைத்தார். முதலில் மறுத்த அவர் தனது வருங்கால கணவர் தானே என ஒப்புக்கொண்டார். ஜாலியாக இருந்து விட்டு அந்த வாலிபர் சென்று விட்டார்.

தொடர்ந்து அந்த வாலிபர் இளம்பெண்ணை புறக்கணித்து, பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. மேலும் திருமணம் செய்யவும் மறுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த இளம்பெண் இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி