கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 28க்குட்பட்ட கிருஷ்ணராயபுரம், ஆவாரம்பாளையம் மாரியம்மன் கோயுல் தெருவில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக்கேட்டறிந்தார். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அப்பகுதியில் தெருவிளக்கு அமைத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.