மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் கடிதம்

59பார்த்தது
மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேர் ஜன.22இல் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது. தொடர் கைது நடவடிக்கைகள் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது இத்தகைய போக்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் அரசு உடனே கவனம் செலுத்துவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி