சென்னையில் இன்று காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னையின் பல பகுதிகளில் இரட்டை வானவில் தென்பட்டது. சூரிய ஒளிக் கதிர்கள் மழைத் துளிகளில் பட்டு சிதறும்போது வானவில் தென்படுகிறது. பொதுவாக 7 அல்லது அதற்கும் குறைவான வண்ணங்களில் வான குடையை அமைக்கும் வானவில், இன்று இரட்டையாக தெரிந்தால் மக்கள் அதனை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.