அண்ணாநகர்: இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

3942பார்த்தது
அண்ணாநகர்: இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்
அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 26 வயது பட்டதாரி பெண், கடந்த நவம்பர் மாதம் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். எனது தோழி மூலம் கிண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திடீரென ராஜேஷ், எனக்கு திருமணம் ஆக வில்லை என்றும் உன்னை தீவிரமாக காதலிக்கிறேன். எனவே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கடந்த ஒரு வருடமாக பழகி வந்தார். அத்துடன் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதன் பிறகு தான் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. எனவே தன்னை ஏமாற்றிய ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதன் அடிப்படையில், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து இன்று அதிகாலை ராஜேஷை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி