இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்றவர் கைது..

77பார்த்தது
இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்றவர் கைது..
ஆந்திர மாநிலம் தாய்மாமாபுரத்தைச் சேர்ந்த இந்து இவருக்கு கடந்த ஆண்டு திருமணமானது. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனை பிரிந்து திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் இந்து வாழ்ந்துவந்தார். நேற்று காலை தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்த போது அதே கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் (30) என்ற நபர், இந்துவுக்கு தாலி கட்ட முயற்சித்தார். இந்து மற்றும் அவரது தாத்தா தடுக்க முயன்றபோது குபேந்திரன் இருவரையும் தாக்கி தப்பிச் சென்றார். இந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குபேந்திரனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி