தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

60பார்த்தது
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு இயல்பான வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது. இதில், சென்னை, நீலகிரி உட்பட ஒரு சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. வெயிலை பொறுத்தவரை, கடந்த சில தினங்களாக சற்றே குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெப்பச்சலன மழை என்றால், காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் கூடிய மழையாகத்தான் பொழியும்.

அந்த நிலை இன்றும் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான மழையுமே, பொதுவாக வெப்பச்சலன மழை எப்படி இருக்குமோ, அதே நிலையில்தான் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி