முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: கட்சிகள் பங்கேற்பு

63பார்த்தது
காவிரி விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை தொடங்கியது.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11. 50 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையேற்றார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செயலர் மணிவாசகம், சட்டதுறை வல்லுநர்கள், திமுக சார்பில் ஆர். எஸ். பாரதி, வில்சன் எம். பி. , அதிமுக சார்பில் எஸ். பி. வேலுமணி, ஓ. எஸ். மணியன், பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கு. செல்வபெருந்தகை, பாமக சார்பில் ஜி. கே. மணி, சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி. ராமச்சந்திரன், மு. வீரபாண்டியன்,  விசிக சார்பில் தொல். திருமாவளவன், எஸ். எஸ். பாலாஜி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம். எச்ஜாவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி. வேல்முருகன், கொமதேக சார்பில் ஈ. ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.