சென்னை திருமங்கலம் அரசு அலுவலர் குடியிருப்பின் முன்புறம் உள்ள நடைபாதைகளில் கடைகள் ஆக்கிரமித்துள்ளன.
இங்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு உணவு உண்கிறார்கள். இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வழியாக வரும் குடியிருப்பு வாசிகளான பெண்கள், மாணவர்கள் இவர்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.