திருச்சி பஞ்சப்பூரில் ஆம்னி பேருந்து நிலையம்: முதல்வர்

55பார்த்தது
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில் ரூ.17.60 கோடியில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு (ஆம்னி) பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் மு. க. ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா. கார்த்திகேயன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சிராப்பளளி மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாகவும், ஏற்கெனவே அமைந்துள்ள 2 பேருந்து நிலையங்கள் போதுமானதாக இல்லாததாலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், தற்போது பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசுப் பேருந்து நிலையம் 4 ஏக்கரில் அமைய உள்ளது.

இப்பேருந்து நிலையம் 30, 849 சதுரடி பரப்பிலான 2 பேருந்து நடைமேடைகளுடன், 82 பேருந்துகளை கையாளும் வசதியுடன், 37 இயக்கப்படும் பேருந்து நிறுத்த தடங்கள், 45 காத்திருப்பு பேருந்து நிறுத்த தடங்களுடன் 1, 42, 945 சதுரடியில் அமைகிறது.

முதல்வர் மு. க. ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில், மூலதன மானிய நிதி, இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதியின்கீழ் ரூ. 17. 60 கோடி மதிப்பில் இந்த பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி