BREAKING: பிடிபட்டது கொலைகார சிறுத்தை

578பார்த்தது
BREAKING: பிடிபட்டது கொலைகார சிறுத்தை
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதியில் மலைத்தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. சிறுமி உயிரிழந்ததால் கொதிப்படைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக வனத்துறையினர் சிறுத்தையை முயற்சியில் இறங்கினர். இதற்காக கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு அந்த கொலைகார சிறுத்தை பிடிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிறுத்தை பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி