இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்

61169பார்த்தது
இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே கனகவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரின் மனைவி சரஸ்வதி (55). இந்நிலையில் சம்பவத்தன்று குமார் கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வந்துள்ளனர். அவரது கழுத்தில் நகை காணாததால், நகைக்காக நடந்த கொலை என கூறி விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்தபோது சரஸ்வதி வீட்டிற்கு அவரது சகோதரி மகன் வந்து சென்றுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவசர தேவைக்கு பணம் கொடுக்காததால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கொலை செய்தேன் என கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி