மூத்த பத்திரிகையாளர் நிகில் வாக்லேவின் கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் புனேவில் நேற்று இரவு நடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர் எல்.கே.அத்வானிக்கு எதிராக வாக்லே கருத்து தெரிவித்ததால் பாஜகவினர் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. புனேவின் டெக்கான் பகுதியில் ராஷ்டிர சேவா தளம் நடத்திய "நிர்பய் பானோ" பேரணியில் பங்கேற்க சென்ற பாஜக தொண்டர்கள் காரின் மீது மை வீசி அதன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.