ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக் கிழமை வரலெட்சுமி விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் வெள்ளி/பித்தளை செம்பில் கலசம் அலங்கரித்து, மகாலெட்சுமி புகைப்படம் வைத்து, மலர்களால் அலங்கரித்து, சர்க்கரை பொங்கல், பால் நெய்வேத்யதம் செய்து பாடல்கள் பாடி வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கை கூடும். மாங்கல்ய பலம் பெறவும், கணவர் மற்றும் குழந்தைகள் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.