ஹரியானா மாநிலம் பட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கித்(19). இவர் நேற்று(ஏப்ரல் 26) கணினி மையத்திற்கு சென்ற போது அவரை மறித்த சிலர் குண்டர்கள் அவரது ஆடையை கழற்றி கட்டையால் தாக்கியுள்ளனர். மேலும் கார் ஒன்றை அந்த இளைஞன் மீது மோதி அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கித், “தன்னை சிலர் கடத்தி, வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து நடுரோட்டில் தடியடி நடத்தியதாகவும், காரை ஏற்றிவிட்டு தப்பி ஓடியதாகவும் கூறியுள்ளார்.