'கலைஞர் கனவு இல்லம் திட்டம்' சொந்த இடம் உள்ள பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்ட ஆணை வழங்கப்படும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் தகுதியினை கள ஆய்வு செய்து, தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கலாம். ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடனுதவி மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.