அடுத்தடுத்து கணவன், மனைவி தற்கொலை - சோகம்

1886பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் -60, இவரது மனைவி சோலையம்மாள் 54, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில ஆண்டுகளாக சோலையம்மாள் குடல் இறக்க நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இதற்காக 2 முறை அறுவை சிகிச்சை செய்தும் நோய் குணமாகவில்லை. இதனால் சோலையம்மாள் மே 1 தேதி இரவு விஷம் குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மே 2ம் தேதி உயிரிழந்தார்.

தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை பெற்றுக் கொள்வதற்காக உறவினர்கள் அனைவரும் குன்னம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுடன் வந்த நடராஜன் வழியிலேயே உறவினர்களை விட்டு பிரிந்து சென்று ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை வீட்டின் அருகே குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவ்வழியே வந்தவர்கள் விசாரித்த போது விஷம் குடித்தது தகவல் தெரிந்தது. இதனையடுத்து நடராஜனையும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நடராஜன் - சோலையம்மாள் ஆகிய இருவரது உடலையும் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வந்த உறவினர்கள் மே3ம் தேதி மாலை கணவன், மனைவி இருவரையும் சேர்த்தே அடக்கம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி