பெரம்பலூர்: சாலை விபத்தில் 2 சிறுவர்கள் துடிதுடித்து பலி

4900பார்த்தது
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகே கவுல் பாளையம் கிராமத்தில் கிணறு வெட்டும் தொழிலாளியான ஆய்க்குடியைச் சேர்ந்த சேகர் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்கா வெங்கடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா ஆகிய இருவரும் கவுல் பாளையம் கிராமத்தில் கிணறு வெட்டும் தொழில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேகர் மகன் கோகுல்(வயது 13), மற்றும் ராஜா மகன் நித்திஷ்(வயது 14) ஆகிய இருவரும், ஏப்ரல் 25ஆம் தேதி பகல் 2 மணி அளவில், இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பெரம்பலூர் நகருக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது நெடுவாசல் பிரிவு சாலையில், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்தில் இரண்டு சிறுவர்களும் பலத்த அடிபட்டு உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்கள் உடலையும் மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனம் எது, யார் வாகனத்தை ஓட்டி வந்தது என விசாணை செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you