பெரம்பலூர் பர்னிச்சர் கடையில் தீ விபத்து, பல லட்சம் சேதம்

1522பார்த்தது
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள தனியார் (விஜய மெட்டல் மார்ட்) பர்னிச்சர் கடை உள்ளது, கடைக்கு தேவையான கட்டில் மெத்தை சோபா உள்ளிட்ட பொருட்கள் கடை அருகே உள்ள மாடியில், தகரத்தில் குடோன் அமைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மே 5ம் தேதி பகல் ஒரு மணி அளவில் திடீரென குடோனில் தீப்பிடித்து புகை கிளம்பியது, இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சி தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர், ஆனால் தீ கட்டுக்குள் வராததால், தீயை அணைக்கும் ரசாயன கலவை (சோடியம் பை கார்பனேட்) கொண்டு நுரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, மேலும் தீ பரவாமல் தடுத்தனர்,

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது, மேலும் தீ எப்படி பிடித்தது, மின்கசிவா, வேறு ஏதும் நிகழ்ந்ததா என்பது குறித்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பெரம்பலூர் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர், இச் சம்பவத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி