அரியலூரில் மது விற்ற பெண் கைது

2597பார்த்தது
அரியலூரில் மது விற்ற பெண் கைது
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையான போலீசார் ஸ்ரீ புரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில், ஸ்ரீ புரந்தான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரி என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி