தென்கச்சி பெருமாள்நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

82பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா பழூர் ஒன்றியம் தென்கச்சிப்பெருமாள் நத்தம், மேலகுடிக்காடு, கீழக்குடிகாடு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து முதலாம் யாகசாலை பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேக விழா இன்று தொடங்கியது. சிவாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் செய்து கடம் புறப்பாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து கோவில் விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றினர்.

கோவில் கலசப்படத்திற்கு ஊற்றப்பட்ட புனித நீர் பின்னர் பொதுமக்களிடத்தில் தெளிக்கப்பட்டது. அப்போது அங்க கூடியிருந்த பக்தர்கள் அம்மன் பக்திகோஷங்களை எழுப்பி வழிபட்டனர். பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி